Posts

Showing posts from October, 2021

கிராம சபை ஒரு பார்வை

*கிராம சபை கேள்வி பதில் :* *அவசியம் படியுங்கள்* *1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?* *1. ஜனவரி 26 (குடியரசு தினம்)* *2. மே 1 (உழைப்பாளர் தினம்)* *3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)* *4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)* *2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?* *ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.* *3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?* *உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.* *4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?* *கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.* *5. கிராம சபையின் தலைவர் யார்?* *கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப...

உங்களுக்காக எப்போதும் நீங்கள் மட்டுமே

பட்டினத்தார் சொன்னது...          உணவை தான் உண்டேன் எப்படி மலம்  ஆனது?           உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா? இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை  கண்கள் வட்டமிட்டதா? பெருத்தன சிறுக்கும்!!  சிறுத்தன பெருக்கும்!!           என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா? "இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று  மனைவியும் சுற்றமும் பேசியது      எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!  நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!  இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!! அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!! அனைவரு...